"வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது" -தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2057
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதனை ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்க கூடாது எனவும், சட்ட விதிகளின்படி, உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments